நமது சில சகோதரர்கள் -குரான் ஓதமட்டார்கள் ஆனால் ஆயத்து குர்ஸ் பலகை வேண்டி வீட்டில் மாட்டிக்கொள்வார்கள் ,தொழமாட்டார்கள் ஆனால் பாங்கு சொன்னால் ஓடிப்போய் ரேடியோவை பூட்டுவார்கள் ,கந்தூரி ,மௌலுது ,27ம் கிழமை மாடு அறுக்கும் நிகழ்ச்சி என்றால் அதற்கு மிகவும் கஷ்டப்படுவார்கள் அது மட்டுமல்ல அன்றைக்கு அமீர் சாப்பில இருந்து ஒரு குறுப்புக்கே தொழுகை இருக்காது தொழுகை நடைபெறும் அவர்கள் கடும் பிசியாக வீடி அடிச்சிக்கி இருப்பார்கள் இப்படியானவர்கள் இஸ்லாம் என்றால் என்ன அது எப்படியான சட்டம் என்பதை தேடி படிக்கவும் மாட்டார்கள் படித்தவர்கள் உண்மையை சொன்னால் அவர்களை குழப்பாவாதிகள் என்று ஓதிக்கியும் விடுவார்கள் ** இவர்களுக்கு தெரிந்த இஸ்லாம் ( மய்யதின் ஆண்டவர் மெயின் போடர் ,கோழி மோதினார் தண்ணி பருக்கி அறுக்கனும் அப்பத்தான் சாப்புடுவார்கள் ,இப்ப கொஞ்சம் பரவாயில்ல கோழிக்கடை வந்ததால அது கொஞ்சம் கொரஞ்சுத்து (பாவம் மோதினுக்குத்தான் பொழப்பு போச்சி) அடுத்தது துனியாவில உள்ள ஷிர்க் ,பிதஆ கஞ்சா சாராயம் எண்டு ஒருவர் செஞ்சிக்கிட்டே இருப்பார் திடீர் எண்டு ஒரு வெள்ளிக்கிழம ராவு இல்லலாட்டி நோம்பு 27ம் கிழம மகுத்தாப்போனா இருக்கவன் சொல்றது 'சா நல்ல மகுத்து இப்புடி ஒரு மகுத்து ஆருக்கும் கிடைக்குமா என்று அவன இவர்கள் சொர்க்கவாதி ஆக்கிவிர்றது (அவன்ர சிர்று அல்லாக்குத்தான் தெரியும் ) இவர்கள் முடிவு செய்து விடுவார்கள், காலையில இஸ்லாமிய கீதம் எண்டு ஒரு நாசமாப்போன பாட்டு அத சுபகில போட்டா முப்பது துசுவையும் முழுசா ஒதினதுக்கு சமன் *வெள்ளிக்கிழம ஜும்மாக்கு மட்டும் சேவெடுத்து சென்ட் அடிச்சி ஒரு கைலேஞ்சும் தலையில கட்டிக்கு வந்து பள்ளிக்குள்ளயும் வாரதில்லை ஜும் ஆ முடியும் வரைக்கும் மரத்துக்கு கீழ பேசிக்கிட்டே நிக்கிற இகாமத் சொல்றப்போ ஓடி வார என்னமோ யுத்தக்கு போற மாதிரி அது முடின்ஞ்சி ஊட்ட போய் அந்த கைலேஞ்ச கலட்டி எறிஞ்சா இனி அடுத்த வெள்ளிக்கிழம தான் அந்த கைலேஞ்சிக்கு வேல *சுபஹுக்கு பாங்கு சொன்னா வேலைக்கு போற லுஹருக்கு பாங்கு சொன்னா வேலைய முடிக்கிற அசருக்கு பாங்கு சொன்னா கடைத்தெருவு போடியார் சந்திப்பு மகரிப்பு பாங்கு சொன்னா நாளக்கி வேலக்கி போற சாமான் வேண்றது அதோட ஒரு கஞ்சா சுறுட்டு அப்பத்தான் இசாவுக்கு நல்லா சாப்பிடலாம் இப்படி பாங்கு சிலருக்கு வாழ்க்கை டைம் டேபிள் *************
கருத்து வேறுபாடென்னும் கறையான்கள் வந்து உங்கள் புரிந்துணர்வை சீரழிக்கும்! மிகவும் புத்தியுடன் நடந்துகொள்ளுங்கள்!
Subscribe to:
Post Comments (Atom)
My Blog List
-
-
’தொடு’ திரை - காட்சி# 1 சூர்யா தன் அறையில் துணையில்லாத ஒற்றை காதல் பறவை வளர்க்கிறான். தொடுதிரையில் காதற்கிளிகளை உயிர்ப்பித்து கீச்சு கீச்சென பேசி சிறகடிக்கச் செய்கின...6 years ago
-
An update to the Blogger post editor to help with mixed content - Back in September, we announced that HTTPS support was coming to blogspot.com, making it possible for you to encrypt connections to your blog; since then,...9 years ago
-
ஒரு யுகமழித்த வழி... - இதே..... இரவாய்த்தான் இருக்கவேண்டும் குரைத்தலின் ஓசை கூடியும் குறைந்தும் பாதச்சுவட்டை அழித்தழித்தே கடக்க வேண்டியிருக்கிறது. அடர்ந்த கிளைகள் அடவெடுக்க முக...10 years ago
-
ஒளி ஏற்றும் தீபம் - தி .க .சி - எண்ணற்ற மனிதர்களின் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்தவர் எங்கள் வாழ்வுக்கும் ஒளி ஏற்றி வைத்தார் என்பதில் எந்த வியப்பும் இல்லை .எங்கள் பள்ளிப் பருவத்திலிருந்தே தி ....11 years ago
-
பயணநாளில் ஒரு நாள் - பயணநாளில் ஒரு நாள் ----------------------------------- சிதம்பரம் அண்ணாமலை நகரில் இருக்கும் எனது நண்பர் இக்பாலை சந்திப்பதாக ஏற்பாடு. நண்பரை சந்தித்து வ...12 years ago
No comments:
Post a Comment