Search This Blog

Tuesday 6 December 2011

கடல்கள் இடையே உள்ள திரைகள்

Post image for கடல்கள் இடையே உள்ள திரைகள்

  مَرَجَ الْبَحْرَيْنِ يَلْتَقِيَنِ  بَيْنَهُمَا بَرْزَخٌ لاَّيَبْغِيَن
    அவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான். (ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது; அதை அவை மீறமாட்டா. (55:19,20)
    அரபி மூலத்தில் பர்ஸக் எனும் சொல் இடம் பெறுகின்றது.இதன் பொருள் ஒரு தடுப்பு அல்லது பிரிவினை என்பதாகும். இந்தத் தடுப்பு என்பது ஜடரீதியான (Material) அல்லது ஒரு பொருளை அடிப்படையாகக் கொண்ட தடுப்பு அல்ல. ‘மரஜா’ எனும் அரபிச் சொல்லின் அசலான அர்த்தம் அவர்கள் இருவரும் சந்தித்து கலந்து கொண்டனர் என்பதாகும்.
    இன்றைய நவீன அறிவியல் இரண்டு வெவ்வேறு கடல்கள் ஒன்றாய் சந்திக்கும் இடங்களில் தடுப்பு உள்ளது என்பதை கண்டு பிடித்துள்ளது. இந்த தடுப்பு இரு கடல்களையும் பிரித்து விடுகின்றது. இதனால் ஒவ்வொரு கடலும் அதனதன் தட்ப வெட்ப நிலை, உப்பின் தன்மை, அடர்த்தி ஆகியவற்றை பாதுகாத்திடும் தனித்துவம் பெற்றுவிடுகின்றது.
    ஆனால், ஒரு கடலின் நீர் மற்றொரு கடலுக்குள் நுழைந்து கலக்கின்றபோது அது தன் தனிச்சிறப்பு வாய்ந்த இயல்பை இழந்து விடுகின்றது. திருக்குர்ஆன் கூறும் இந்த நிகழ்வை Dr.William Hay (University of Clorado) தனது ஆராய்ச்சி உறுதி செய்துள்ளார்.
    மத்திய தரைக்கடலுக்கும், ஜிப்ரால்டரில் உள்ள அட்லாண்டிக் சமுத்திரத்திற்கும் இடையே உள்ள தடுப்பைப் பற்றி திருக்குர்ஆன் சொல்லுகின்ற போது அத்தடுப்போடு இணைந்து நிற்கும் ஒரு தடுக்கப்பட்ட திரை (ஹிஜ்ரம் மஹ்ஜூரா) பற்றியும் குறிப்பிடுகின்றது.

وَهُوَالَّذِيْ مَرَجَ الْبَحْرَيْنِ هَذَاعَذْبٌ فُرَاتٌ وَّهَذَامِلْحٌ اُجَاجٌ وَجَعَلَ بَيْنَهُمَا بَرْزَخًا وَّحِجْرًامَّحْجُوْرًا
    அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான்; ஒன்று, மிக்க இனிமையும் சுவையுமுள்ளது; மற்றொன்று உப்பும் கசப்புமானது – இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான். (25:53)
    நதி முகத்துவாரங்களில், அதாவது இரண்டு நதிகள் சந்திக்கும் இடங்களில் உப்பு நீரிலிருந்து சுவைமிகு நீரை தனியாகப் பிரித்து அடையாளம் காட்டும் ஒரு திரை அல்லது மண்டலம் (Pycnocline Zone) உள்ளது. (இம்மண்டலத்தையே திருக்குர்ஆன் திருக்குர்ஆன் ஹிஜ்ரம் மஹ்ஜூரா என்று குறிப்பிடுகின்றது.) இப்பிரிவினை மண்டலம் சுவை நீரிலிருந்தும், உப்பு நீரிலிருந்த்தும் வித்தியாசமான அளவு உப்புத்தன்மை கொண்டுள்ளது.
    இந்த இயற்கை நிகழ்வு கடலின் பல்வேறு இடங்களில் ஏற்படுகின்றது. மத்தியத்தரைக்கடலுக்குள் ஓடி மறையும் எகிப்தின் நைல் நதியிலும்

பூமியை மிக அருகில் சுற்றி வரும் விண்கற்களால் ஆபத்து இல்லை: நாசா உறுதி





அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் மூலம் கடந்த 2009ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட வைஸ் (வைடு பீல்டு இன்பார்டு எக்ஸ்ப்ளோரர்) என்ற விண்கலம், விண்கற்கள், செயற்கை கோள்கள், நட்சத்திரங்கள் ஆகியவை குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது.

பின்னர் நியோ-வைஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட அந்த விண்கலம், கடந்த 2 ஆண்டுகளில் செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களிடையே சுற்றி திரியும் 1 லட்சத்திற்கு மேலான பொருட்களை குறித்த தகவல்களை அளித்துள்ளது. நியோ வைஸ் மூலம் பூமியை மிக அருகில் சுற்றி வரும் 981 விண்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதில் 911 விண்கற்கள் முந்தைய ஆராய்ச்சிகளால் கண்டுபிடிக்கப்பட்டவை. ஆனால் அப்போது அவற்றால் பூமிக்கு ஆபத்து ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. பூமியில் இருந்து 10 கி.மீ. தொலைவை தாண்டியே வலம் வருவதாக தெரிகிறது. இவற்றால் பூமிக்கு எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை.

இவற்றில் ஏதாவது அபாயகரமாக பூமியை நோக்கி வந்தால், அது குறித்து எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க தயாராக இருப்பதாக, நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பொய் சொல்வதனை கண்டு பிடிக்கும் புதிய கருவி




முடியும்.

அதி நவீன தேர்மல் இமாஜிங் தொழில்நுட்பத்துடன் கூடிய கணனி முறைமையின் மூலம் இந்த கமரா இயங்குகின்றது.

இந்த அதி நவீன கருவி பாதுகாப்பு தரப்பினருக்கு மிகவும் உதவியாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கமராவின் மூலம் மூன்றில் இரண்டு வீதமான நபர்களின் முக பாவனையின் அடிப்படையில் உண்மை பேசுகின்றார்களா என்பதனை கண்டறிய முடியும் என பிரித்தானிய விஞ்ஞானி ஹசன் உகேய்ல் தெரிவித்துள்ளார்.

பிரட்போர்ட் மற்றும் அப்ரிஸ்ட்விச் ஆகிய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆய்வாளர்களினால் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வுகளின் பின்னர் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

கண் அசைவு, நகம் கடித்தல், உதடுகளை குவித்தல், மூக்கை சுருக்குதல், பலமாக மூச்சு விடல் உள்ளிட்ட பல்வேறு முக உணர்வு வெளிப்பாடுகளைக் கொண்டு நபர்கள் உண்மை பேசுகின்றார்களா அல்லது இல்லையா என்பதனை கண்டு கொள்ள முடியும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்

My Blog List