சூரிய மருத்துவம் சூரியக் குளியலால் நிகழ்த்தப்பட வேண்டும். விடியற்காலை
செவ்விள ஞாயிறே இதற்கு ஏற்றது. காலை 9 மணிக்குமேல் இது ஏற்றத்தக்கதல்ல.
உள்ளுடைகளுடன் மட்டும் உடலின் முன் பகுதியிலும், பின் பகுதியிலும் வெய்யில்
படும்படு 5 நிமிடத்திலிருந்து 1 மணி நேரம் வரை இருக்கவும். விடியற்காலை
சூரியனின் சாய்ந்த ஒளிக்கதிரில் புறஊதா கதிர்கள் உண்டு, இவை உடலுக்கு சக்தி
தருபவை. விட்டமின் டி இதில் நிறைய உண்டு. இந்த விட்டமின் பற்றாக்குறையால்
குழந்தைகளுக்கு வரும் ரிக்கெட்ஸ், எலும்பு சம்பந்தமான நோய்கள் சூரியக்
குளியலால் குணமாகும். சூரிய ஒளியின் இரசாயனக் கதிர்கள் இரத்தச் சிவப்பு
அணுக்களின் உற்பத்தியைப் பெருக்குகின்றன. சோகை நோய்க்கு சூரியக் குளியல்
மாமருந்து. முடி கொட்டுபவர்கள் அதனை நிறுத்த சூரியக் குளியல் செய்யுங்கள்.
முடி செழித்து வளர கதிரொளி உதவும். கதிரொளி தோலின் வேலையைச்
செம்மையாக்குகிறது. தோல் நோய்கள் வராமல் தடுக்கிறது. நோய்கிருமிகளை
அழிக்கிறது. தோல் நோய்த் தொல்லைகள் மறைய சூரிய குளியல் மிகவும் உதவும்.
எல்லாவிதமான கண் நோய் கோளாறுகளுக்கும் கண்ணை மூடிக்கொண்டு சூரியனைப்
பார்க்க வேண்டும். விழியை பக்க வாட்டிலும், மேலும், கீழும் நகர்த்த
வேண்டும். சூரியக்குளியலின்போது மயக்கம் வருவோர் நரம்பு வியாதி உள்ளோர்,
இரத்தச் சிதைவுள்ளவர்கள் இம்மருத்துவம் செய்யக்கூடாது.
பெரிய சம்பவங்கள் (மீண்டும் தலைப்புச் செய்திகள்- நூல் பார்வை)
-
சன் டிவியில் முதன்மை செய்தி ஆசிரியராக பணியாற்றியவர் ராஜா வாசுதேவன். அதற்கும்
முன்பே பத்திரிக்கைகளிலும், சன் டி.வி.யுடன் கூடுதலாக சில தொலைக்காட்சிகளிலும...
2 months ago



