Search This Blog

Tuesday 28 August 2012

மின் விளக்கு

அமெரிக்க பாடசாலை ஒன்றில் எட்டரை வயது சிறுவனை "இவன் அடி முட்டாள். பாடசாலையில் இருந்தால் மற்ற மாணவர்களையும் கெடுத்து விடுவான். இனி இவனுக்கு பாடசாலையில் அனுமதி இல்லை." என்று ஒர் கடிதம் எழுதி அந்த சிறுவனின் சட்டைப்பையில் வைத்து ஆசிரியர்களால் விரட்டப்பட்டவர்.

...
தாயார் கவலை கொண்டாலும், தைரியமாக வீட்டில் வைத்து பாடங்களை கற்று கொடுத்தார். தாயின் கல்வியிலே வளர்ந்த சிறுவன்.., பின்னாளில் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.


இன்றும், அக்டோபர் 21ம் தேதி இரவு 9:59க்கு வீதி பயண விளக்குகளை தவிர, மிகுதி மின்சார விளக்குகள் அனைத்தையும் அணைத்து ஓரு நிமிடம்அமெரிக்காவை இருளாக்கி விட்டு, பின்னர் மீண்டும் ஒளிர விட்டு... தொலைக்காட்சி, வானொலியில் அறிவிப்பார்கள் இப்படி.., "எடிசன் பிறந்திருக்கா விட்டால் உலகம் இப்படி தான் இருளாக இருந்து இருக்கும்" என்று..!"


மேலே கூறிய அந்த முட்டாள் சிறுவன் தான் பின்னாளில் "விஞ்ஞானிகளின் தந்தை" என போற்றப்படும் "தாமஸ் அல்வா எடிசன்" ஆவார்.

இப்பொழுது சொல்லுங்கள்..! அந்த ஆசிரியர் கூறியது போல் எடிசன் முட்டாளா..? ஆகவே, யாரும் இங்கு முட்டாள் இல்லை.. நீங்களும் அடுத்தவர் அபிப்பிராயத்தில் வாழ்வதை விட்டு விடுங்கள். உங்களை நீங்களே நிர்ணயப்படுத்துங்கள். உங்கள் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு வைரம் இருக்கிறது. அதை பட்டை தீட்டுங்கள்......


நன்றி

My Blog List