பூண்டு
கைவைத்தியத்துக்கு சிறந்தது பூண்டு. அதன் மருத்துவக் குணங்களைப் பற்றி நிறைய
தெரிந்து வைத்திருந்தாலும் நாம் அதை எளிதில் மறந்து விடுவோம்.
அதனால்தான் நமது முன்னோர்கள் சமையலில் பூண்டை அதிகம் பயன்படுத்த நம்மை
பழக்கப்படுத்திவிட்டனர். அன்றாட உணவில் பூண்டை சேர்ப்பதன் மூலம் நமக்குக்
கிடைக்கும் நன்மைகளில் சில வருமாறு:-
* குழந்தை பெற்ற பெண்களுக்கு தினந்தோறும் இரவில் பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக்
கொடுத்தால் தாய்ப்பால் பெருகும்.
* தசைவலி இருக்கும் இடத்தில் பூண்டை நசுக்கி வைத்துக் கட்டினால் வலி சீக்கிரம்
குறையும்.
* உடம்பில் கொழுப்பு சேரவிடாமல் தடுக்கும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு. ஆகையால்தான்
கரையாத கொழும்புச் சத்து உள்ள மாமிச உணவு சமைக்கும் போது பூண்டை அவசியம்
சேர்க்கின்றனர்.
* இரவு உணவுடன் பச்சையாகவோ அல்லது பாலிலோ மூன்று பூண்டுத் துண் டுகளை சாப்பிட்டால்
ஆழ்ந்த உறக்கம் ஏற்படும்.
* பூண்டுக்கு இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் சக்தி உண்டு. அதனோடு இதய தசைகளையும்
இரத்தக் குழாய் தசைகளையும் வலுப்படுத்தும் சக்தி பூண்டுக்கு உண்டு
* பூண்டு ஒரு நார்ச்சத்து மிகுந்த உணவு என்பதால் மலச்சிக்கலை அகற்றும் குணம்
பூண்டுக்கு உண்டு.
* பூண்டை உணவில் சேர்த்துக் கொள்ளும் வாய்ப்பு இல்லாதவர்கள் பூண்டு மாத்திரைகளைச்
சாப்பிடலாம்
No comments:
Post a Comment